செங்கம்: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த தரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா(30). சரண்யா நேற்றுமுன்தினம் பெங்களூரில் உள்ள கணவரை பார்க்க பெங்களூருக்கு அரசு பஸ்சில் 9 மாத கைக்குழந்தை சத்தியபிரியாவுடன் புறப்பட்டார். செங்கம் அடுத்த பாச்சல் அருகே இரவு 9.30 மணியளவில் பஸ் வந்தது. சாலையில் விபத்து தடுக்க இருபுறமும் அடுத்தடுத்து வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் வழியாக பஸ் வளைந்து கடந்து சென்றது. சரண்யாவின் மடியிலிருந்த குழந்தை திடீரென தவறி ஜன்னல் வழியாக ெவளியில் விழுந்தது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.